Saturday 1 August 2015

வாரந்திர மார்க்கசொற்பொழிவு!!

வாரந்திர மார்க்கசொற்பொழிவு!!

                      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளையின் சார்பாக 31/07/2015 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நடத்தப்பட்டது.இதில் வடகரை தவ்ஹீத் மர்கஸ் அழைப்பாளர் சகோ காதர் ஒலி ஹைரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
 
                     இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் வாரந்திர பயான் ,பெண்களுக்கான குர்ஆன் வகுப்புகள்,தெருமுனை பிரச்சாரம்,தனிநபர் தாவா,என முன்பைவிட மிக வீரியமாக செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதோடு இதற்காக துஆ செய்யுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!!
 
 
என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.[31:17]

Sunday 19 July 2015


*நோன்பு பெருநாள் திடல் தொழுகை 2015*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரைகிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை 2015!!

அல்லாஹ்வின் அளப்பெறும் கருணையினால் 18/07/15 அன்று வடகரையில் நபிவழி முறையில் நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பட்டது !!
ஆண்கள்,பெண்கள் ,குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சகோ காதர் ஒலி ஹைரி அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார்கள்.சகோ ஷாகுல் ஹமீது அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தினார்கள்.


 
ஏகத்துவ எதிர்ப்பாளர்களின் விசமப்பிரச்சாரத்திற்கு மத்தியிலே அல்லாஹ்வின்தூதரின் வழிமுறையை நடைமுறைப்படுத்த அருள்புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்!!

அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை 2015நோன்பு பெருநாள் ஃபித்ரா முழு விபரம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளையின் 2015 நோன்பு பெருநாள் ஃபித்ரா வரவு&செலவு மற்றும் வினியோகம்!!

ஃபித்ரா வரவு :

உள்ளூர் வசூல்  =============             89,574
தலைமை மூலம் வரவு ============     38000
மொத்தம் =====================  1,27,574


ஃபித்ரா செலவு :

அரிசி    ===================== 54850
மாடு வகைக்கு================  34800
மளிகை சாமான்கள்&காய் கறி=====   37924
செலவு மொத்தம்==============1,27,574

ஃபித்ரா வழங்கிய விபரம்:

17/07/15 அன்று 603 ஏழைகளுக்கு தலா மூன்று கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது!!

18/07/15 அன்று காலை சுபுஹ் தொழுகைக்கு பின்பு தலா ஒருவருக்கு  1/2 இறைச்சி மற்றும் காய்கறி மளிகை சாமான்கள் 320 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது!!!






தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். [02:274]



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளை ஃபித்ரா வரவு 2015

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளை ஃபித்ரா வரவு 2015
------------------------------------------------------------
  • தைக்கா தெரு                            15404
  • தீ.ப. தெரு                                 10300
  • மதரஸா தெரு                              7200
  • மெயின்ரோடு                              6230
  • அண்ணாவி தெரு                         6080
  • பள்ளிவாசல் தெரு                        5481
  • தண்ணீர்டாங்க் தெரு                    5300
  • ஷெரீஃப் நகர் 1வது தெரு            1500
  • ஷெரீஃப் நகர் 2வது தெரு            5000
  • ஷெரீஃப் நகர் 3வது தெரு            2010
  • ஷெரீஃப் நகர் 6வது தெரு            1000
  • காவல் தெரு                                4600
  • சேர்வாரன் தெரு                          3670
  • காசியார் தெரு                              2250
  • மூன்றுசுழிரோடு                          1900
  • ரஹ்மானியாபுரம்                         1724
  • பண்டாரி தெரு                             1600
  • த.மு. தெரு                                    1500
  • அ.உ. தெரு                                    1100
  • ந.கோ தெரு                                   800
  • கி.மு தெரு                                     500
  • ஜாஹீர்உசேன்நகர் 3வது தெரு       2325
  • ஜாஹீர்உசேன்நகர் 4வது தெரு       400
  • ஜாஹீர்உசேன்நகர் 5வது தெரு       500
  • ஜாஹீர்உசேன்நகர் 6வது தெரு       300
  • தவ்ஹீத் ஜமாத் மாநிலதலைமை    38000
                                                            ---------------------
           மொத்தம்                                       127574
                                                            ----------------------

 

Saturday 20 June 2015

சங்கை மிகு ரமலான்!! 2015

சங்கை மிகு ரமலான்!! 2015

நெல்லை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளையின் சார்பாக வடகரை ''தவ்ஹீத் மர்ஹஸி''ல்  நோன்பு திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடும் கியாமுல் லைல் எனும் இரவுத்தொழுகை தொழுவதற்கும் ,பெண்களின் இரவுத்தொழுகைக்காக தனி இடவசதியும்
அதை தொடர்ந்து சிறப்பு பயானும் நடை பெற்று வருகின்றது !!

நோன்பாளிகளிக்கு நோன்புகஞ்சி வழங்கிட நன்கொடையளித்த நல் உள்ளங்களுக்கும் இந்தப்பணியினை சிறப்பாக செய்து கொண்டிருகின்ற கொள்கை சொந்தங்களுக்கும் நன்றியினையும்,ஈருலக வெற்றியையும் தந்தருள்வானக என்று இறைவனை வேண்டுகிறோம்!!







ஒன்றுக்கு பத்து என நன்மையை வாரிவழங்கும் இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பாளிகள் மட்டும் நுழையக்கூடிய  ''ரய்யான்''என்னும் வாசல் வழியாக சொர்க்கத்தை அடையும் பாகியத்தை உங்களுக்கும் எங்களுக்கும் ,தந்தருள்வானக!!

Friday 24 April 2015

தெருமுனைக்கூட்ட வீடியோ - 27.03.2015


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை சார்பாக 27.03.2015 அன்று நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்தில் சகோ. அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் உரையாற்றிய அவதூறுகளை பரப்பாதீர்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! என்ற தலைப்பிலான உரை.

Thursday 26 March 2015

மாபெறும் மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் !!!

இன்ஷா அல்லாஹ் !!  நாளை  27/03/15வெள்ளிகிழமை மாலை 6 மணிக்கு  வடகரை தைக்காத்திடலில் மாபெறும்  மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் !!!

உரைநிகழ்த்துபவர்கள் !!

சகோ :மைதீன்

தலைப்பு :வட்டி ஓர்  வன்கொடுமை

சகோ :அபூபக்கர் ஸஅதி

தலைப்பு :அவதூறுகளை பரப்பாதீர் !!அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் !!

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற துஆ செய்யுங்கள் !!

Monday 23 March 2015

பயான்



வடகரை கிளை மர்கஸில் 23.03.2015 அன்று பயான் நடைபெற்றது.

தலைப்பு: உளூவின் சட்டம்
உரை : காதர் ஒலி

Tuesday 17 March 2015

வடகரை பொதுக்கூட்ட வீடியோ 2015 - 02




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை சார்பாக 07.02.2015 அன்று நடைபெற்ற பொதுக்கூட்ட வீடியோ - 02

தலைப்பு : வழிகெடுப்போர் யார்?
உரை : எம்.எஸ். சுலைமான்

வடகரை பொதுக்கூட்ட வீடியோ 2015 - 01



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை சார்பாக 07.02.2015 அன்று நடைபெற்ற பொதுக்கூட்ட வீடியோ - 01

தலைப்பு : லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
உரை : கோவை. ரஹ்மத்துல்லாஹ்

Saturday 14 March 2015

மெஹாபோன் பிரச்சாரம் !!


13/03/14 அன்று வடகரை பெரிய பள்ளிவாசல்  தெருவில் மெஹாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது !!!

                         சகோ :மௌலவி R .காதர் ஒலி ஹைரி  அவர்கள்  ''நபிகள் நாயகம்'' (ஸல் )அவர்களை நேசிப்பது யார் ?? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.கூட்டத்தின் இடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கூட்டம் இனிதே நடைபெற்றது !!கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற அருள்புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !!

அல்ஹம்துலில்லாஹ் !!அல்ஹம்துலில்லாஹ் !!அல்லாஹு அக்பர் !!அல்லாஹு அக்பர் !!

Sunday 8 February 2015

''இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்''

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையினால்

வடகரையில்  07/02/2015 சனிக்கிழமை அன்று தைக்கா திடலில் ''இஸ்லாமிய மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம்''வடகரை கிளை தலைவர் சகோ அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில்  மாவட்ட & கிளை  நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மார்க்க விளக்கபொதுகூட்டம் சிறப்பாக நடைபெற்றது!!
 
 கூட்டத்தில் சகோ மௌலவி R.காதர் ஒலி ஹைரி (இமாம் தவ்ஹீத் மர்கஸ் ஏனங்குடி) அவர்கள் ''என்னைக்கவர்ந்த ஏகத்துவம்''என்ற தலைப்பிலும் ,சகோ மௌலவி M.S.சுலைமான் (TNTJமாநில மேலாண்மைகுழு உறுப்பினர் )அவர்கள் ''வழிகேடுப்போர் யார்''என்ற தலைப்பிலும் ,சகோ மௌலவி R.ரஹ்மத்துல்லாஹ் (TNTJமாநில பொது செயலாளர்)அவர்கள் ''லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ''என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்!!
 
மேலும்  இக்கூட்டத்திற்கு வாவாநகரம்,அச்சன்புதூர்,செங்கோட்டை ,தென்காசி ,கடையநல்லூர் ,புளியங்குடி ஆகிய ஊர்களிலிருந்து கொள்கை சகோதர.சகோதரிகள் பெருமளவில் திரளாக கலந்து கொண்டார்கள் !!
 
கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக ஆன்லைனில் நேரலையாக காண்பதற்கு சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது !!
 
பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !!
 
''அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்''.(110:1,2,3)
 




 
 

Tuesday 27 January 2015

மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் !!

இன்ஷா அல்லாஹ் !! பிப்ரவரி 7 ல்

பரலேவிகளின் அவதூறுகளுக்கும் ,பொய்பிரச்சாரத்திற்கும் எதிராக மாபெரும் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் !!

இஸ்லாத்தின்   தூய்மையான வடிவத்தை அறிந்து கொள்வதற்காக அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளை !!!

இக்கூட்டம் சிறப்பாக நடை எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம் !!!

Thursday 22 January 2015

இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் !!
                                              வடகரையில் பிப்ரவரி 7ல்  அசத்திய வாதிகளின் அவதூறுகளுக்கு பதிலடியாகவும் ,சத்தியத்தை மட்டும் சொல்வதற்காகவும் மாபெறும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் !!
 
 உரை -- சகோ R.காதர் ஒலி ஹைரி (வடகரை)

தலைப்பு -- 'என்னை கவர்ந்த ஏகத்துவம்''

உரை ---சகோ M.S.சுலைமான்

தலைப்பு -- வழிகேடுப்போர் யார்???

உரை -- சகோ கோவை R.ரஹ்மத்துல்லாஹ்

தலைப்பு --''லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்''

இடம்-- தைக்கா திடல் வடகரை

இக்கூட்டம் இனிதே நடைபெறுவதற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்!!!

அசத்தியத்தை வேரறுப்போம் அல்லாஹ் நாடினால்!!!

Monday 12 January 2015

சத்தியகொள்கையில் சங்கமித்த சங்கைமிகு ஆலிம்கள்



11/01/2014 அன்று மேலப்பாளையத்தில் நடைபெற்ற  ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டத்தில் நெல்லை மாவட்டம் வடகரையை சேர்ந்த சகோதரர் மௌலவி காதர்ஒலி (ஹைரி) அவர்கள் தாம் இந்த சத்தியக்கொள்கையில் இணைந்தது பற்றி உரையாற்றிய பொது ...

                                           ''என்னை கவர்ந்த ஏகத்துவம்''