Showing posts with label துண்டுப் பிரசுரம். Show all posts
Showing posts with label துண்டுப் பிரசுரம். Show all posts

Saturday, 26 July 2014

ஃபித்ரா ஏன்? ஏதற்கு? வாகனப் பிரச்சாரம்







கடந்த 25.07.2014 அன்று நெல்லை மாவட்டம் வடகரை கிளையின் சர்பாக ஃபித்ரா ஏன்? ஏதற்கு? என்ற தலைப்பில் 21 இடங்களில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. "ஸதகத்துல் ஃபித்ர்" என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஃபித்ரா பேனர்கள்


















கடந்த 22.07.2014 அன்று நெல்லை மாவட்டம் வடகரை கிளையின் சர்பாக 4 இடங்களில் ஃபித்ரா குறித்த விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

"ஃபித்ரா" நோட்டிஸ்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளையின் சார்பாக அடிக்கப்பட்ட "ஃபித்ரா" நோட்டிஸ்.

Wednesday, 23 July 2014

இரத்ததான முகாம்






கடந்த 31.05.2014 அன்று TNTJ வடகரை கிளை சார்பாக இரத்ததான முகாம் & இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 35 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அனைத்து சமுதாய மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம்




ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சிறைசெல்லும் போராட்டம் ஏன்? பிட்நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.

Thursday, 17 January 2013

துண்டு பிரசுரம்

17.1.2013 அன்று மவ்லித் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "குர்ஆன் வரிகளுக்கு முரணாகும் மவ்லித் வரிகள்" எனும் தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Wednesday, 16 January 2013

மவ்லிதை தடை செய்யக்கோரி கடிதம்

 வடகரையில் குர்ஆன், ஹதீஸுடன் போரிடும் மவ்லிதை ஓதப்படுவதற்கு தடை செய்யக்கோரி மூன்று முஹல்லா ஜமாஅத் தலைவர்களிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்துடன் "திருக்குர்ஆன் வரிகளோடு மோதும் மவ்லித் வரிகள்" & "முஹ்யத்தீன் மவ்லித் ஓர் ஆய்வு" என்ற பிரசுரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.  "இவர்கள் நம்மை சரியாக வழிநடத்துவார்கள்" என்று நம்பும் மக்களின் மறுமை வாழ்வைக் கருத்தில் கொண்டு கடிதத்தை அலட்சியம் செய்யாமல் தலைவர்களும், ஆலிம்களும் இன்ஷா அல்லாஹ் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். எடுப்பார்களா...?

நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் (நயவஞ்சகன்) ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான், பேசினால் பொய்யே பேசுவான், ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப்பேசுவான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புஹாரி 34
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.
 அல்குர்ஆன் 4:145
கடிதத்தின் மாதிரி வாசகங்கள்

திருக்குர்ஆன் வரிகளோடு மோதும் மவ்லித் வரிகள்

முஹ்யத்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

Thursday, 16 August 2012

துண்டு பிரசுரம்....

15.08.2012 அன்று ஃபித்ரா_வைப் பற்றிய விழிப்புணர்வு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்......