Saturday 2 January 2016

''ஷிர்க் ஒழிப்பு மாநாடு''செயல்வீரர்கள் கூட்டம்!!

அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!!!

இன்ஷா அல்லாஹ் !! எதிர்வரும் ஜனவரி 31ல் திருச்சியில் நடைபெற இருக்கும் இணைவைப்பிற்கு எதிரான மாபெறும்''ஷிர்க்' ஒழிப்பு மாநாட்டிற்கான செயல்வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் கிளையின் சார்பாக நடைபெற்றது!!!

 இஸ்லாமிய தாஃவா மற்றும் சமுதாயசேவைகள் சிறப்பாக செய்த கிளைகளின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகளும்,பாராட்டு பத்திரங்களும் வழங்கப்பட்டது!!அல்ஹம்துலில்லாஹ்!!!

இதில் வடகரை கிளையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது!!

விருதுகள் விபரம்:-

1,ஃபித்ரா வசூல்!!
(பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பித்ரா வசூலில் மாவட்டத்திலேயே சதவிகித அடிப்படையில் முதலிடம் பிடித்தது!!)

2,வெள்ளநிவாரணம்!!
(சமீபத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதிதிரட்டுவதில் சிறப்பாக செயல்பட்டது!!)

3,ரத்ததான முகாம்!!!
(உயிர்காக்கும் சேவையான ''ரத்ததான முகாம்''முதல் முறையாக நடத்தியது!!!)













இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இதை விட சிறப்பாக செயல்படுவதற்கு துஆச்செய்யுமாறு வேண்டுகிறோம்!!

விருதுகள் ஆயிரம் கிடைத்தாலும் மறுமையில் அல்லாஹ்வின் கைகளால் கிடைக்கப்போகும் மகத்தான விருதிற்கே ஆதரவுவைக்கின்றோம்!!!



 

Saturday 1 August 2015

வாரந்திர மார்க்கசொற்பொழிவு!!

வாரந்திர மார்க்கசொற்பொழிவு!!

                      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளையின் சார்பாக 31/07/2015 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நடத்தப்பட்டது.இதில் வடகரை தவ்ஹீத் மர்கஸ் அழைப்பாளர் சகோ காதர் ஒலி ஹைரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
 
                     இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் வாரந்திர பயான் ,பெண்களுக்கான குர்ஆன் வகுப்புகள்,தெருமுனை பிரச்சாரம்,தனிநபர் தாவா,என முன்பைவிட மிக வீரியமாக செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதோடு இதற்காக துஆ செய்யுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!!
 
 
என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.[31:17]

Sunday 19 July 2015


*நோன்பு பெருநாள் திடல் தொழுகை 2015*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரைகிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை 2015!!

அல்லாஹ்வின் அளப்பெறும் கருணையினால் 18/07/15 அன்று வடகரையில் நபிவழி முறையில் நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பட்டது !!
ஆண்கள்,பெண்கள் ,குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சகோ காதர் ஒலி ஹைரி அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார்கள்.சகோ ஷாகுல் ஹமீது அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தினார்கள்.


 
ஏகத்துவ எதிர்ப்பாளர்களின் விசமப்பிரச்சாரத்திற்கு மத்தியிலே அல்லாஹ்வின்தூதரின் வழிமுறையை நடைமுறைப்படுத்த அருள்புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்!!

அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை 2015நோன்பு பெருநாள் ஃபித்ரா முழு விபரம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளையின் 2015 நோன்பு பெருநாள் ஃபித்ரா வரவு&செலவு மற்றும் வினியோகம்!!

ஃபித்ரா வரவு :

உள்ளூர் வசூல்  =============             89,574
தலைமை மூலம் வரவு ============     38000
மொத்தம் =====================  1,27,574


ஃபித்ரா செலவு :

அரிசி    ===================== 54850
மாடு வகைக்கு================  34800
மளிகை சாமான்கள்&காய் கறி=====   37924
செலவு மொத்தம்==============1,27,574

ஃபித்ரா வழங்கிய விபரம்:

17/07/15 அன்று 603 ஏழைகளுக்கு தலா மூன்று கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது!!

18/07/15 அன்று காலை சுபுஹ் தொழுகைக்கு பின்பு தலா ஒருவருக்கு  1/2 இறைச்சி மற்றும் காய்கறி மளிகை சாமான்கள் 320 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது!!!






தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். [02:274]



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளை ஃபித்ரா வரவு 2015

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளை ஃபித்ரா வரவு 2015
------------------------------------------------------------
  • தைக்கா தெரு                            15404
  • தீ.ப. தெரு                                 10300
  • மதரஸா தெரு                              7200
  • மெயின்ரோடு                              6230
  • அண்ணாவி தெரு                         6080
  • பள்ளிவாசல் தெரு                        5481
  • தண்ணீர்டாங்க் தெரு                    5300
  • ஷெரீஃப் நகர் 1வது தெரு            1500
  • ஷெரீஃப் நகர் 2வது தெரு            5000
  • ஷெரீஃப் நகர் 3வது தெரு            2010
  • ஷெரீஃப் நகர் 6வது தெரு            1000
  • காவல் தெரு                                4600
  • சேர்வாரன் தெரு                          3670
  • காசியார் தெரு                              2250
  • மூன்றுசுழிரோடு                          1900
  • ரஹ்மானியாபுரம்                         1724
  • பண்டாரி தெரு                             1600
  • த.மு. தெரு                                    1500
  • அ.உ. தெரு                                    1100
  • ந.கோ தெரு                                   800
  • கி.மு தெரு                                     500
  • ஜாஹீர்உசேன்நகர் 3வது தெரு       2325
  • ஜாஹீர்உசேன்நகர் 4வது தெரு       400
  • ஜாஹீர்உசேன்நகர் 5வது தெரு       500
  • ஜாஹீர்உசேன்நகர் 6வது தெரு       300
  • தவ்ஹீத் ஜமாத் மாநிலதலைமை    38000
                                                            ---------------------
           மொத்தம்                                       127574
                                                            ----------------------

 

Saturday 20 June 2015

சங்கை மிகு ரமலான்!! 2015

சங்கை மிகு ரமலான்!! 2015

நெல்லை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளையின் சார்பாக வடகரை ''தவ்ஹீத் மர்ஹஸி''ல்  நோன்பு திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடும் கியாமுல் லைல் எனும் இரவுத்தொழுகை தொழுவதற்கும் ,பெண்களின் இரவுத்தொழுகைக்காக தனி இடவசதியும்
அதை தொடர்ந்து சிறப்பு பயானும் நடை பெற்று வருகின்றது !!

நோன்பாளிகளிக்கு நோன்புகஞ்சி வழங்கிட நன்கொடையளித்த நல் உள்ளங்களுக்கும் இந்தப்பணியினை சிறப்பாக செய்து கொண்டிருகின்ற கொள்கை சொந்தங்களுக்கும் நன்றியினையும்,ஈருலக வெற்றியையும் தந்தருள்வானக என்று இறைவனை வேண்டுகிறோம்!!







ஒன்றுக்கு பத்து என நன்மையை வாரிவழங்கும் இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பாளிகள் மட்டும் நுழையக்கூடிய  ''ரய்யான்''என்னும் வாசல் வழியாக சொர்க்கத்தை அடையும் பாகியத்தை உங்களுக்கும் எங்களுக்கும் ,தந்தருள்வானக!!