Saturday 2 January 2016

''ஷிர்க் ஒழிப்பு மாநாடு''செயல்வீரர்கள் கூட்டம்!!

அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!!!

இன்ஷா அல்லாஹ் !! எதிர்வரும் ஜனவரி 31ல் திருச்சியில் நடைபெற இருக்கும் இணைவைப்பிற்கு எதிரான மாபெறும்''ஷிர்க்' ஒழிப்பு மாநாட்டிற்கான செயல்வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் கிளையின் சார்பாக நடைபெற்றது!!!

 இஸ்லாமிய தாஃவா மற்றும் சமுதாயசேவைகள் சிறப்பாக செய்த கிளைகளின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகளும்,பாராட்டு பத்திரங்களும் வழங்கப்பட்டது!!அல்ஹம்துலில்லாஹ்!!!

இதில் வடகரை கிளையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது!!

விருதுகள் விபரம்:-

1,ஃபித்ரா வசூல்!!
(பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பித்ரா வசூலில் மாவட்டத்திலேயே சதவிகித அடிப்படையில் முதலிடம் பிடித்தது!!)

2,வெள்ளநிவாரணம்!!
(சமீபத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதிதிரட்டுவதில் சிறப்பாக செயல்பட்டது!!)

3,ரத்ததான முகாம்!!!
(உயிர்காக்கும் சேவையான ''ரத்ததான முகாம்''முதல் முறையாக நடத்தியது!!!)













இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இதை விட சிறப்பாக செயல்படுவதற்கு துஆச்செய்யுமாறு வேண்டுகிறோம்!!

விருதுகள் ஆயிரம் கிடைத்தாலும் மறுமையில் அல்லாஹ்வின் கைகளால் கிடைக்கப்போகும் மகத்தான விருதிற்கே ஆதரவுவைக்கின்றோம்!!!



 

No comments:

Post a Comment