Tuesday 16 December 2014

தழிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் வண்மையாக கண்டிக்கிறது !!


பாகிஸ்தான் பள்ளிக் குழந்தைகளை கொன்ற பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டிதனமன செயலை தழிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் வண்மையாக கண்டிக்கிறது


பாகிஸ்தானில் பெஷாவர் நகர் பள்ளிக்கூடத்தில் 84 குழந்தைகள் உட்...பட 126 அப்பாவிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்திருக்கின்றனர் என்ற செய்தி மனிதாபிமானம் கொண்ட அனைவரையும் குலை நடுங்க செய்திருக்கிறது.

ஏதுமறியாத அப்பாவி குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் பயங்கரவாதிகள் மூலம் படுகொலை செய்யப்பட்டிருக்கினறனர். இந்த கொடூர நிகழ்வை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும். எந்த சித்தாந்தத்தின் பெயரிலும் இத்தகைய பயங்கரவாதத்தை ஒருக்காலும் நியாயப்படுத்த முடியாது.

உண்மையான முஸ்லிம்கள் அனைவரும் இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கின்றனர். இதை செய்தவர்கள் ஒருக்காலும் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியாது. சக மனிதனிடத்தில் இரக்கம் காட்டாத எவரும் முஸ்லிமாக மட்டுமின்றி மனிதராக இருக்க கூட தகுதியற்றவர்கள் ஆவர். இஸ்லாத்தின் அடிப்படைக்கும் மனிதத்தன்மைக்கும் எதிரான தீவிரவாதிகளின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
இப்படிக்கு
முஹம்மது யூசுப்
துனைபொதுச் செயலாளர்
 

★மார்க்க விஷயங்கள் குறித்த உங்களது சந்தேகங்களுக்கான பதில்களை அறிந்துகொள்ள…

★நாட்டு நடப்புகள் பற்றி விளக்கும் "தினம் ஒரு தகவல் & செய்திகளை" அறிந்து கொள்ள…
...
★தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமைக் கழக அறிவிப்புகளை தெரிந்து கொள்ள...

✔லைக் (Like) செய்வீர்…

https://www.facebook.com/ThouheedJamath

(தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்)
 
 

No comments:

Post a Comment