Sunday 8 February 2015

''இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்''

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையினால்

வடகரையில்  07/02/2015 சனிக்கிழமை அன்று தைக்கா திடலில் ''இஸ்லாமிய மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம்''வடகரை கிளை தலைவர் சகோ அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில்  மாவட்ட & கிளை  நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மார்க்க விளக்கபொதுகூட்டம் சிறப்பாக நடைபெற்றது!!
 
 கூட்டத்தில் சகோ மௌலவி R.காதர் ஒலி ஹைரி (இமாம் தவ்ஹீத் மர்கஸ் ஏனங்குடி) அவர்கள் ''என்னைக்கவர்ந்த ஏகத்துவம்''என்ற தலைப்பிலும் ,சகோ மௌலவி M.S.சுலைமான் (TNTJமாநில மேலாண்மைகுழு உறுப்பினர் )அவர்கள் ''வழிகேடுப்போர் யார்''என்ற தலைப்பிலும் ,சகோ மௌலவி R.ரஹ்மத்துல்லாஹ் (TNTJமாநில பொது செயலாளர்)அவர்கள் ''லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ''என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்!!
 
மேலும்  இக்கூட்டத்திற்கு வாவாநகரம்,அச்சன்புதூர்,செங்கோட்டை ,தென்காசி ,கடையநல்லூர் ,புளியங்குடி ஆகிய ஊர்களிலிருந்து கொள்கை சகோதர.சகோதரிகள் பெருமளவில் திரளாக கலந்து கொண்டார்கள் !!
 
கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக ஆன்லைனில் நேரலையாக காண்பதற்கு சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது !!
 
பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !!
 
''அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்''.(110:1,2,3)