Wednesday 23 May 2012

அல்ஹம்துலில்லாஹ்...!


கடந்த 20.05.2012 அன்று நெல்லை மாவட்டம்
வடகரை தைக்கா திடலில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கிளைத் தலைவர் ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.Dr.அப்துல் காதர் “டெங்கு காய்ச்சல்” பற்றி விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.சகோ.சைய்யது ஒலி அவர்கள் “TNTJ_யின் அரும்பணிகள்” பற்றியும், சகோ.அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌஸி "ஈமானும் இணைவைத்தலும்" எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.நூற்றுக்கணக்கான ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.வடகரையில் பெண்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். ஆங்காங்கே வரதட்சணை,புகைப்பிடித்தல்,பெண்களின் உடை போன்ற விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டன. கிளைச் செயலாளர் முஹம்மது மீரான் அவர்கள் நன்றியுரையாற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...!